கொரோனா தொற்று கட்டுபாடின்றி அதிகரித்து வரும் பின்னணியில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மொரட்டுவ, பாணந்துறை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னதாக அறிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் உடன் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை